சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அர விரி கோடல் நீடல் பண் - பஞ்சமம் (திருகுடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுவரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=pM-KCxf4Vn0 |
5.022
திருநாவுக்கரசர்
தேவாரம்
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி பண் - திருக்குறுந்தொகை (திருகுடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுவரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=RPv3ou9s8KE |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.059  
அர விரி கோடல் நீடல்
பண் - பஞ்சமம் (திருத்தலம் திருகுடமூக்கு (கும்பகோணம்) ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு கும்பேசுவரர் திருவடிகள் போற்றி )
அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே, மர விரி போது, மௌவல், மணமல்லிகை, கள் அவிழும் குர, விரி சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா, இர விரி திங்கள் சூடி இருந்தான்; அவன் எம் இறையே. | [1] |
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து, அயலே பூத்து, அரவங்களோடும், புகை கொண்டு அடி போற்றி, நல்ல கூத்து அரவங்கள் ஓவா, குழகன், குடமூக்கு இடமா, ஏத்து அரவங்கள் செய்ய, இருந்தான்; அவன் எம் இறையே. | [2] |
மயில் பெடை புல்கி ஆல, மணல் மேல் மட அன்னம் மல்கும், பயில் பெடை வண்டு பண் செய் பழங்காவிரிப் பைம்பொழில் வாய், குயில் பெடையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா, இயலொடு வானம் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே. | [3] |
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து, உமையாள் வெருவ, அக்கு, அரவு, ஆமை, ஏனமருப்போடு, அவை பூண்டு, அழகு ஆர் கொக்கரையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா, எக்கரையாரும் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே. | [4] |
வடிவு உடை வாள்-தடங்கண் உமை அஞ்ச, ஒர் வாரணத்தைப் பொடி அணி மேனி மூட உரிகொண்டவன்; புன்சடையான்; கொடி நெடுமாடம் ஓங்கும், குழகன், குடமூக்கு இடமா, இடி படு வானம் ஏத்த இருந்தான்; அவன் எம் இறையே. | [5] |
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே, தழை வளர் மாவின், நல்ல பலவின், கனிகள் தயங்கும் குழை வளர் சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா, இழை வளர் மங்கையோடும் இருந்தான்; அவன் எம் இறையே. | [6] |
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான்; எழில் வையம் உய்யச் சிலை மலி வெங்கணையால் சிதைத்தான், புரம் மூன்றினையும்; குலை மலி தண்பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா, இலை மலி சூலம் ஏந்தி இருந்தான்; அவன் எம் இறையே. | [7] |
நெடு முடிபத்து உடைய நிகழ் வாள் அரக்கன்(ன்) உடலைப் படும் இடர் கண்டு அயர, பருமால் வரைக்கீழ் அடர்த்தான்; கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா, இடு மணல் எக்கர் சூழ இருந்தான்; அவன் எம் இறையே. | [8] |
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய நீர் இரி புன்சடை மேல் நிரம்பா மதி சூடி, நல்ல கூர் எரி ஆகி நீண்ட குழகன்; குடமூக்கு இடமா, ஈர் உரி கோவணத்தோடு இருந்தான்; அவன் எம் இறையே. | [9] |
மூடிய சீவரத்தார், முது மட்டையர், மோட்டு அமணர் நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன் நலத்தான், கூடிய குன்றம் எல்லாம் உடையான், குடமூக்கு இடமா, ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான்-அவன் எம் இறையே. | [10] |
வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்- நண்பொடு நின்ற சீரான், தமிழ் ஞானசம்பந்தன்-நல்ல தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார் விண் புடை மேல் உலகம் வியப்பு எய்துவர்; வீடு எளிதே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.022  
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருகுடமூக்கு (கும்பகோணம்) ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு கும்பேசுவரர் திருவடிகள் போற்றி )
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி அங்கு ஆவணத்து உடையான், அடியார்களை;- தீ வணத் திருநீறு மெய்பூசி, ஓர் கோவணத்து உடையான், குடமூக்கிலே. | [1] |
பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர், தீத்து ஆடி(த்) திறம் சிந்தையுள் வைம்மினோ!- வேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க! என்று கூத்து ஆடி(ய்) உறையும் குடமூக்கிலே. | [2] |
நங்கையாள் உமையாள் உறை நாதனார்- அம் கையாளொடு அறுபதம் தாழ்சடைக் கங்கையாள் அவள், கன்னி எனப்படும் கொங்கையாள், உறையும் குடமூக்கிலே. | [3] |
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல், ஏதானும்(ம்) இனிது ஆகும்; இயமுனை- சேதா ஏறு உடையான் அமர்ந்த(வ்) இடம்- கோதாவிரி உறையும் குடமூக்கிலே. | [4] |
நக்க(அ)அரையனை, நாள்தொறும் நன் நெஞ்சே! வக்கரை உறைவானை, வணங்கு, நீ!- அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன், கொக்கரை உடையான், குடமூக்கிலே. | [5] |
துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்! பிறவி நீங்கப் பிதற்றுமின், பித்தராய்-! மறவனாய்ப் பார்த்தன்மேல் கணை தொட்ட எம் குறவனார் உறையும் குடமூக்கிலே. | [6] |
தொண்டர் ஆகித் தொழுது பணிமினோ, பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர்!- விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரைக் கொண்டவன்(ன்) உறையும் குடமூக்கிலே. | [7] |
காமியம் செய்து காலம் கழியாதே, ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்மினோ!- சாமியோடு, சர(ச்) சுவதி அவள், கோமியும்(ம்), உறையும் குடமூக்கிலே. | [8] |
சிரமம் செய்து, சிவனுக்குப் பத்தராய்ப் பரமனைப் பல நாளும் பயிற்றுமின்!- பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் குரவனார் உறையும் குடமூக்கிலே. | [9] |
அன்றுதான் அரக்கன் கயிலாயத்தைச் சென்று தான் எடுக்க(வ்), உமை அஞ்சலும் நன்று தான் நக்கு, நல்விரல் ஊன்றி, பின் கொன்று, கீதம் கேட்டான், குடமூக்கிலே. | [10] |